/* */

தலைமறைவு குற்றவாளி கைது: தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு

சென்னையில் தலைமறைவு குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க சென்ற போது கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தலைமறைவு குற்றவாளி கைது: தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு
X

நடராஜன்(எ) பாம்கை நடராஜன்.

சென்னை பெரும்பாக்கம் போலீசார் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த நடராஜன்(எ) பாம்கை நடராஜன்(24), என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தேடிப் பிடிக்க சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் கத்தியால் வெட்ட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்கு என 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இவ்வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், இவருக்கு பிடி ஆணை வழங்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’