/* */

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
X

துரைப்பாக்கத்தில், கெனால் ஒட்டிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து பல இடங்களும் வெள்ளக்காடாக மாறிவிட்டன. அவ்வகையில், பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் கெனால் ஒட்டிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
இங்குள்ள பாண்டியன் நகர் முழுவதுமே, சுமார் 4 அடி வரை மழைநீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில், நீர்வரத்து தடைப்பட்டிருப்பதால், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பக்கிங்ஹாம் கால்வாயை முறையாக தூர்வாராததால் கால்வாயில் மழைநீர் செல்லாமல், தங்கள் வீடுகளை சூழ்ந்துள்ளதாகவும், உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் வேதனையோடு குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உடனடியாக நிவரணங்களை அரசு வழங்கிட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 12 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்