/* */

புனேவிலிருந்து மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை

தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து இன்று மாலை விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன.

HIGHLIGHTS

புனேவிலிருந்து மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை
X

தமிழ்நாட்டிற்கு மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 42 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இது கொரோனா வைரஸ் 3 ஆம் அலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவ வல்லுனா்கள் குழு எச்சரித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் மாஸ்க் அணிவது,பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை தொடா்ந்து மக்கள் அனைவரும் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு குறைந்தளவு தடுப்பூசிகளையே அனுப்பி வருகிறது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சா், பிரமருக்கு, தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று அவசர கடிதம் எழுதினாா். அதோடு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா், நல்வாழ்வு துறை செயலாளா் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி, ஒன்றிய சுகாதார அமைச்சா், ஒன்றிய சுகாதார செயலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசிகளை கேட்க செய்தாா். அதன்பின்பு தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு சீரான இடைவெளியில் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் ,ஓன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 42 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On: 31 July 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!