/* */

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்
X

பாலாற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம். 

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 1,04,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு, காஞ்சிபுரத்தில் பாலாறு வழியாக தடுப்பணைகள் நிரம்பி வழிந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்ககிறது. எதிர்பாராத வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அதிகாரிகள் படகுகளில் சென்று, பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலாற்று வெள்ளம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 1903 ஆம் ஆண்டுக்கு பிறகு, இப்போது தான் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 1903-இல் வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1,25,00 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது சற்று குறைவாக 1,04,000 கன அடி நீர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி பகுதியில் இருந்து கணக்கிடும் போது விநாடிக்கு 1,25,000கன அடிநீர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 20 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!