/* */

மதுராந்தகம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

மதுராந்தகம் அருகே நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மதுராந்தகம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
X

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் பூதூர் பகுதியில் தனியார் வீட்டு மனை பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பல நாட்களாக இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் கவனித்து வந்த நிலையில் ரேஷன் அரிசி ஏற்றுவதற்காக வாகனம் ஒன்றுவந்து உள்ளது.

அப்போது பின்தொடர்ந்து வந்த அப்பகுதி இளைஞர்கள், வாகனம் சென்றவுடன் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் படாளம் போலீசார் ஆய்வு செய்ததில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கொள்ளளவு கொண்ட 90 அரிசி மூட்டைகள் 3600 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இதை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது யார் இந்த வீட்டு உரிமையாளர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல மாதங்களாக இரவு நேரங்களில் லாரிகள் மூலம் வந்து அரிசி இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்திருக்கலாம் எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!