/* */

ரெம்டெசிவிா்மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் கைது

செங்கல்பட்டு அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டா் ரெம்டிசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது

HIGHLIGHTS

ரெம்டெசிவிா்மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே தனியாா் மருத்துவ கல்லூரியில் டாக்டராக உள்ள முகமது இக்பால் என்பவா் ரெம்டெசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீசாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் OMR சாலை அருகே உள்ள தாழம்பூரில் உள்ள அவருடைய வீடு அருகே விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இன்று காலை சிவில் சப்ளை சிஐடி போலீசாா்,சாதாரண ஆட்கள் போல் நடித்து,செல்போன் மூலம் டாக்டரை தொடா்பு கொண்டு மருந்து கேட்டனா். அப்போது முகமது இக்பால்,ஒரு டோஸ் மருந்து ரூ.22 ஆயிரம். உங்களுக்கு 6 டோஸ் மருந்து வேண்டுமானால் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரம் பணம் தர வேண்டும் என்றாா். பணத்துடன் தாழம்பூருக்கு வரும்படி கூறினாா்.

இதையடுத்து சிவில் சப்ளை சிஐடி போலீசாா், அவா் வரச்சொன்ன இடத்திற்கு மருந்து வாங்குவது போல் சென்றனா். அங்கு மருந்துடன் வந்த டாக்டா் முகமது இக்பாலை கைது செய்தனா். அதோடு அவரிடமிருந்த 6 டோஸ் மருந்து பாட்டில்களையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!