Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப்புறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும். மேலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.