Begin typing your search above and press return to search.
இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் அன்பரசன் வழங்கல்
திருப்போரூர் ஒன்றியத்தில் இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை, அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியத்தில், நீண்ட நாட்களாக இருளர் இன மக்கள் பட்டா கேட்டு வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இலவச பட்டா வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு இருளர் இன மக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்றம் உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எல்.இதயவர்மன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.