Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரொனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 347-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 801-ஆக உயர்ந்தது. 750 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.