/* */

இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில் மக்கள்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி இரண்டாவது நாளாக செங்கல்பட்டு நகர மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில் மக்கள்
X

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் செங்கல்பட்டு நகர மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக செங்கல்பட்டு நகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வரதராசனார் வீதி வேதாசலம் நகர் ராட்டின கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இராட்டினகிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை செல்ல கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வருடாந்திர தோறும் சிறு மழைக்கே செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரி இல்லாத காரணமாக மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே வடிகால்களை உடனடியாக தூர்வாரி வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!