/* */

மறைமலை நகர் நகராட்சியில் அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம்

செங்கல்பட்டு மறைமலை நகர் நகராட்சியில், அதிமுக சார்பில் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மறைமலை நகர் நகராட்சியில் அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம்
X

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட, 21 வார்டுகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விருப்பமனு பெற்றுச் சென்றனர்.

இன்று முதல், வரும் 29 தேதி வரை விருப்ப மனு வினியோகம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அந்தந்த அதிமுக அலுவலகங்களில் விருப்பமனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள், இன்று மறைமலைநகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றனர்.

நகராட்சி வார்டு மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, விண்ணப்பம் பெறுபவர்கள், 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்; நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்ப பெறுபவர்கள்; 2500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் டி.எஸ். ரவிக்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கோபி கண்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 26 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!