/* */

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கீரைகார தெருவைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சாவித்திரி(55). இவர்களது மகன் கார்த்திகேயன்(27). இவர் திருமணம் செய்து வைக்க கோரி தினமும் குடிபோதையில் தாய் சாவித்திரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தாய் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறி விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று மதியம் உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது முந்திரி கொல்லையில் கார்த்திகேயன் கைலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் தாய் சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  4. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  5. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  6. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  7. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  8. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  9. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  10. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...