/* */

மது பாட்டில்களை கடத்தி சென்ற வாலிபர் கைது

காவல்துறையினர் நீலகண்டன் கடத்தி சென்ற 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்துயுள்ளனர்.

HIGHLIGHTS

மது பாட்டில்களை கடத்தி சென்ற வாலிபர் கைது
X

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மூட்டையோடு சென்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்துபோது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் செங்கான் பகுதியில் வசிக்கும் நீலகண்டன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மது பாட்டில்களை ஸ்ரீபுரத்தான் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நீலகண்டன் கடத்தி சென்ற 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்துயுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை கடத்தி சென்று விற்பனை செய்த குற்றத்திற்காக நீலகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 20 Jun 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்