/* */

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

குழவடையான் கிராமத்தில் பிடிபட்ட முதலையை வனத்துறையினர் அனைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது
X

குழவடையான் கிராமத்தில் சுற்றி திரிந்த முதலை பிடிபட்டது.

குழவடையான் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முதலை ஒன்று பகல் முழுவதும் குளத்தில் தங்கிவிட்டு இரவு நேரங்களில் விளைநிலங்களில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளான ஆடு மற்றும் மாடுகள் கடித்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பயத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இதனையடுத்து கிராம பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு முதலையை தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக முதலையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் விளைநிலங்களில் சுற்றி வந்த முதலையை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலையை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் குழவடையான் கிராமத்தில் சுற்றி திரிந்த முதலையை மீனவர்களிடம் இருந்து மீட்டு அணைக்கரை கீழணை கொள்ளிடத்தில் சென்று பத்திரமாக விட்டனர். விளை நிலங்களில் சுற்றித்திரிந்த முதலையை பிடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 24 July 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’