/* */

ஜெயங்கொண்டம் அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே வலிப்பு காரணமாக ஆசிரியர் ஒருவர் மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு
X

உயிரிழந்த ஆசிரியர் ராஜேந்திரன்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (எ) சந்துரு (வயது 39). இவர் முனியதிரையன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் கொம்மேடு கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்று வருவதாகக் கூறிச்சென்றார்.

அங்கு அவருக்கு சொந்தமான மீன் குட்டையில் நின்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில், அவர் தடுமாறி மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேந்திரனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அரசு பள்ளி ஆசிரியர் மீன் குட்டையில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 Jun 2022 6:42 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...