/* */

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

கோடாலி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
X

குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கோடாலி கிராமத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் வடக்குத் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து குடிநீர் வரவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று குடிநீர் எடுத்து வருவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன், அணைக்கரை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், இன்னும் பத்து தினங்களுக்குள் புதிய போர்வெல் அமைத்து முறைப்படி குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொது மக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 7 Sep 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்