Begin typing your search above and press return to search.
முகாம்களில் கபசுர குடிநீர் வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கபசுர குடிநீரை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குளத்தூர், கு.வல்லம், அய்யூர், காட்டாத்தூர், சூரக்குழி, ஆண்டிமடம் ஆகிய ஊர்களில், மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலைகள், ஏரிகள், வீடுகள் ஆகியன மோசமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முகாம்களில் தங்கியுள்ளவர்களை இன்று சந்தித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், கபசுரக் குடிநீரையும் வழங்கினார். இந்நிகழ்வில், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி(வட்டார ஊராட்சி), அருளப்பன் (கிராம ஊராச்சி), துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் சண்முகம் உடனிருந்தனர்.