Begin typing your search above and press return to search.
2 இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் துவக்கி வைத்தார்
கோ.கருப்பூர் காலனி மற்றும் வக்கரமாரி காலனி ஆகிய இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோடாலிகருப்பூர் ஊராட்சியில், கோ.கருப்பூர் காலனி மற்றும் வக்கரமாரி காலனி ஆகிய இடங்களில் 25 KVA/11 KV மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
மேலும் உதயநத்தம் ஊராட்சி, கண்டியன்கொல்லை கிராமத்தில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவைக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் உதவி மின்பொறியாளர்கள் இளையராஜா, செல்வராஜ், இரமேஷ், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குமணன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோவன், உதயநத்தம் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் கலந்துகொண்டனர்.