/* */

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய மாசிமக பிரம்மோற்சவ தேர்திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவத்தில் இன்று தேர்திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய மாசிமக பிரம்மோற்சவ தேர்திருவிழா
X

உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ பிரகன்தநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் மற்றும் விநாயகர் முருகன் சுவாமி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு 9 ஆம்‌ நாள் விழாவான இன்று தேர் வீதி உலா நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


தேர் புறப்பாடு நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தமிழக அரசு சார்பாக கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். இதில் அறநிலையத் துறை அதிகாரிகளும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தினர் மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.

பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெண்சிவனடியார்கள் மற்றும் பொது மக்கள் கும்மி அடித்து சிவன் பாடல் பாடியும் வழிபாடு செய்தனர். நாளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Feb 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்