/* */

நெல்கொள்முதல் நிலையம் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நெல்கொள்முதல் நிலையம்  அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, பாதுகாப்பாக வைக்கப்படாததால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து வீனாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், மழையில் வீணான நெல்லை அரசை கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும்போது அரிசியின் தரமும் குறைந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இன்று முட்டுவாஞ்சேரி நெல்கொள்முதல் நிலையத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான நடைமுறைகளையும் கேட்டறிந்தார். இதனையடுத்து கூடியிருந்த விவசாயிகளிடம் விரைவில் நிரந்தர நெல்பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அமைச்சர் ஆய்வின் போது, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உடனிருந்தார்.




Updated On: 2 July 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  3. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  4. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  5. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  6. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  7. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  8. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  9. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து