/* */

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி

உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது

HIGHLIGHTS

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
X

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் மேற்பார்வையில், ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் 60 பேருக்கு மூன்று நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் நாளில் பேரிடர் காலங்களில் வெள்ளம் போன்ற விபத்துகளில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

2-வது நாளாக உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கமாக அளிக்கப்பட்டது தமிழ்நாடு கமாண்டர் பிரிவை சேர்ந்த குழுவினர் இந்த செயல் விளக்க பயிற்சி அளித்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், ரப்பர் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On: 8 Oct 2022 9:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்