/* */

அரியலூர்: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

அரியலூர் மாவட்டத்தில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

அரியலூர்: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
X

தண்டனை அடைந்த பாண்டியன்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது22). இவர், அதேபகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாண்டியன் மறுத்ததால், கடந்த 2018 ஜூன் மாதம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில்10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும், இளம்பெண்ணை ஏமாற்றியமைக்காக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Updated On: 23 Feb 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி