/* */

அரியலூர் எஸ்.பி. அலுவலகம் முன் கைக்குழந்தையுடன் பெண் திடீர் சாலை மறியல்

அரியலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் கைகுழந்தையுடன் பெண் திடீர் என நடத்திய சாலை மறியல் போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் எஸ்.பி. அலுவலகம் முன் கைக்குழந்தையுடன் பெண் திடீர் சாலை மறியல்
X

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்  கைக்குழந்தையுடன்  பெண் மறியல் செய்தார்.

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பூனைக்கண்ணி தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி சசிகலா. இவருக்கும் இவர்களது இடத்தில் கடை வைத்திருக்கும் சவுந்தர்ராஜன் என்பவருக்கும் கடையை காலி செய்வதில் பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுசம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்திலும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இன்று தனது கைக்குழந்தையுடன் எஸ்.பி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனையறிந்த போலீசார் அந்த பெண் மற்றும் கைகுழந்தையை அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். மேலும் இதுசம்மந்தமாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 30 Nov 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!