Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது
இலையூர் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர், கோரியம்பட்டி, வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், அப்பகுதியில் ஜெயங்கொண்டம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 நபர்கள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன், இலையூர் கோரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது.
போலீசார் ரங்கநாதன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.