/* */

ஆண்டிமடம் அருகே அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை பணம் திருட்டு

ஏழரை பவுன் செயின் 50ஆயிரம் ரொக்கம் திருடிச்சென்ற மர்மநபர்களை ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

ஆண்டிமடம் அருகே அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை பணம்  திருட்டு
X

ஆண்டிமடம் அருகே உள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தில்  மர்ம நபர்கள் வீட்டை உடைத்து திருடிச்சென்றனர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன்(58). மனைவி சுசீலா (45). சந்திரசேகரன் வீட்டின் பின்பக்க கதவை பாரையால் நெம்பி உடைத்து தூங்கிக் கொண்டிருந்த சுசிலாவின் கழுத்தில் இருந்த ஏழரை சவரன் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோல் பாலகிருஷ்ணன் மனைவி சத்தியா (38) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அருகில் வடக்குத்தெரு செந்தில் (38) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ளே எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழரை பவுன் செயின் 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 May 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...