Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே வெல்டிங் கடையில் ஒரு லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருட்டு
அரியலூர் அருகே வெல்டிங் கடையில் இருந்த வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு, ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 14 ஆயிரம் திருட்டு.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்கிற தனவேல். இவர் அப்பகுதியில் வெல்டிங்கடை நடத்தி வருகிறார். இன்று கடையை திறப்பதற்காக வந்த வேலு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 14ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.