Begin typing your search above and press return to search.
லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோரைக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 24. இவர் கும்பகோணம் மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்கு தனது கிராமத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்றபோது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த லாரியில் மோதி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து ஏற்படுத்திய லாரி கும்பகோணத்தில் ஜல்லிக் கற்களை இறக்கிவிட்டு மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.