/* */

அரியலூர் காவலர் குடியிருப்பில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏ.டி.எம். திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் காவலர் குடியிருப்பில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு
X

 அரியலூர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ATM ஐ அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெரோஸ் கான் அப்துல்லா திறந்து வைத்தார்.


அரியலூர் மாவட்ட காவல்துறையினர் பயனடையும் வகையில் அரியலூர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ATM அமைக்கப்பட்டு வந்தது. முழுமையாக பணி நிறைவடைந்த நிலையில் இதனை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இன்று காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் ஸ்டேட் பேங்க் மேலாளர் குமரவேல், ATM நிறுவுவதற்கு உதவியாக இருந்த சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்க சுந்தர், ஜமின் வெங்கடேசன், வழக்கறிஞர் மனோகரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!