தொடர்மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மணல்கடத்தலில் ஈடுபட்ட ரமேசை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (26). இவர் கடந்த சில வருடங்களாக தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தலைமறைவாக இருந்த ரமேசை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று விக்கிரமங்கலம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுமதி கைது செய்தார்.
ரமேஷ் என்பவர் வெளியில் இருந்தால் மீண்டும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவார் என்பதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், மணல் கடத்தலில் ஈடுபட்ட ரமேசை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரமேசிடம் வழங்கப்பட்டது.