/* */

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
X

கீழப்பழுவூர் அருகே சாலை மறியல் செய்ய முயன்றவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள காணிக்கைபுரம் ரயில்வேகேட் பகுதியில் சாலை கடந்த ஒரு வருட காலமாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்து கூடினர்.

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் இளையபெருமாள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Updated On: 27 Oct 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  3. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  5. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  7. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  8. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  9. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  10. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!