Begin typing your search above and press return to search.
ராகுல்காந்தி பிறந்தநாளை கொண்டாடிய அரியலூர் மாவட்ட காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் இராஜேந்திரன் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து, ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார்.
HIGHLIGHTS
காங்கிரஸ் கட்சி முன்னால் தலைவர் ராகுல்காந்தியின் 50வது பிறந்ததின விழா அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் இராஜேந்திரன் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து, ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் கொரோனா தொற்று பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக அரிசி, காய்கறி வழங்கப்பட்டது. அரியலூர் நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மனோகரன், பிசிசி வட்டாரத் தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், பழனிசாமி, செந்தில், செயலாளர் ரவிச்சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவக்குமார் நன்றியுரை கூறினார்.