/* */

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Grievance Redressal Committee - பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 301 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Grievance Redressal Committee - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (01.08.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 301 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மதுவிளக்கு மற்றும் ஆயத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மதுக்குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய 49 நபர்களில் 47 நபர்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஒரு நபருக்கு விலையில்லா ஆடு வழங்கும் வகையில் சம்மந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30,000 என மொத்தம் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் நிதியுதவிக்கான காசோலைகளையும், ஒரு நபருக்கு பெட்டிக்கடை நடத்த ரூ.30,000-க்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!