/* */

அரியலூரில் இறந்து பிறந்த பெண் குழந்தை: கைப்பையில் கொடுத்த செவிலியர்கள்

அரியலூர் அரசுமருத்துவமனையில், இறந்து பிறந்த பெண் குழந்தை உடலை, கைப்பையில் செவிலியர்கள் போட்டு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் இறந்து பிறந்த பெண் குழந்தை: கைப்பையில் கொடுத்த செவிலியர்கள்
X

இறந்து பிறந்த சிசுவின் உடலை கைப்பையில் போட்டுத் தந்த செவிலியர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்.

அரியலூர் அருகேயுள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்; சென்னையில் சம்ஸா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில், ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்தது.

தற்போது மீண்டும் கர்ப்பமடைந்த மணிமகலைக்கு, நேற்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரவு சேர்க்கப்பட்ட மணிமேகலையை, ஒருமுறை மருத்துவர் பார்த்து சிகிச்சை செய்துள்ளார். அதன்பின்னர், பிரசவவலி ஏற்பட்ட மணிமேகலை, மருத்துவர்களோ, செவிலியர்களோ வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மணிமேகலைக்கு பெண் குழந்தை தானாக பிறந்து வெளியே வந்துள்ளது. தொப்புள்கொடியை, மணிமேகலைக்கு அருகில் இருந்த ஒரு பெண் பிரித்துள்ளார். குழந்தை, இறந்த நிலையில் தாய் மணிமேகலைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதேநேரம், ஆசை ஆசையாக பிறந்து கையில் ஏந்த வாசலில் காத்திருந்த தந்தை சேகரிடம், இறந்த குழந்தையை பையில் போட்டு செவிலியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயல், உறவினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவ்வாறு அலட்சியமாக செயல்படுவதாக, உரிய முறையில் சிசுவின் உடலை தராமல் இப்படி செய்தது அதிர்ச்சி தருவதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 9 Oct 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்