Begin typing your search above and press return to search.
வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் மேளா
ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கடன் வழங்க வழிகாட்டும் மேளா நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழக முதல்வர் உத்தரவின்படி,போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் ஆலோசனையின்படி, கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயராமன் தலைமையில், அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கடன் வழங்க வழிகாட்டும் மேளா நடைபெற்றது.
ஒன்றியக் கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி ஆதனக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.கே. சிவசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். ஆதனக்குறிச்சி, ஆலத்தியூர் ஊராட்சிகளில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் கலந்துகொண்டு *வேளாண்மை வங்கியில் உறுப்பினராக சேரவும், சுயுதவிக்குழு கடன் , தனிநபர் கடன் மற்றும் பயிற்கடன் பெறவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டது.