Begin typing your search above and press return to search.
தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிறுவர்கள் சேமிப்பு தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் சட்டமன்ற அலுவலகத்தில், கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த திராவிட கழக ஒன்றிய செயலாளர் தங்கசாமி (கேபிள் ஆபரேட்டர்) அவர்களின் குழந்தைகள் கண்மணி (5ம் வகுப்பு), மணிமாறன் (4ம் வகுப்பு) ஆகியோரின், சிறுசேமிப்பு தொகையான ரூ.5000/-த்தை ,கொரோனா தடுப்பு பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனை நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் உள்ளார்.