/* */

சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்

சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள்முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்
X

அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த புனித அந்தோனியர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான 100 க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 30 பேர் லேசான காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 23 April 2022 12:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!