Begin typing your search above and press return to search.
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 29.12.2021 காலை 11.00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.
HIGHLIGHTS
இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 29.12.2021 அன்று காலை, 11.00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைப்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.