அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் தீபாவளியை, பொதுமக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
HIGHLIGHTS
தீபாவளி என்றாலே இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் வீடுகளில் தீபம் ஏற்றி வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பண்டிகையாகும்.
காலையில் வீடுகளில் தீபம் ஏற்றி, எண்ணெய் குளியல் முடித்த பின்னர் புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டனர். சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்று கொண்டடினர். பின்னர் இனிப்புகளை உண்டும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கியும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
மதியம் விட்டு விட்டு கனமழை பெய்தபோதிலும், பொதுமக்களின் வசதிக்காக மழையும் மாலையில் சற்று ஓய்வெடுத்தது.இதனையடுத்து குடும்பத்தில் உள்ள சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் உற்சாகமாக தீபாவளி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஒரே நேரத்தில் அனைத்து வீதிகளிலும் மண்ணிலும், வானத்திலும் வெடித்த பட்டாசுகளால் தீபாவளி பண்டிளை களைகட்டியது.
கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், தரைசக்கரம், சரவெடி, விண்ணை பிளக்கும் வண்ண வானவெடிகளை வெடித்து சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினர்.
வீட்டின் முன்பு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு அதிகஅளவில் இருந்ததால் தெருக்கள் அனைத்தும் புகைமண்டலாக காணப்பட்டது.