/* */

வாக்கு எண்ணும் மையம் செல்ல கொரோனா முடிவு, செய்தியாளர்களுக்கும் அவசியம்

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப் படுகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்கும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை அடையாள அட்டை வழங்கப்பட்டு, வாக்கு எண்ணும் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என உத்திரவிடப்பட்டுள்ளது.

எனவே செய்தியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 29.04.21 மற்றும் 30.04.21 ஆகிய தினங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் காலை 9.00 மணிமுதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் நடைபெற உள்ளது.

தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்கும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பித்து, தங்களுக்குரிய அடையாள அட்டைகளை பெற்று வாக்கு எண்ணும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) பாரதி தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்