Begin typing your search above and press return to search.
கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் நிலங்கள் அளவிடும் பணி தொடக்கம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
அரசுக்கு சொந்தமான கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் நிலங்களை அளவீடு செய்ய இந்துசமயம் மற்றம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அண்மையில் உத்தரவிட்டார். அதனடிப்படையில், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி கங்கை கொண்டசோழபுரத்தில் நேற்று தொடங்கியது.
அளவிடும் பணியில், இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் ஆனந்தவேல், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கோயில் செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் நில அளவையர்கள்,ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.