/* */

அரியலூர் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை முகாம் பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில் கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

செந்துறை அடுத்த இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர் மற்றும் 60-வயதுக்குமேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 கட்டங்களாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் முதல் தவணை தடுப்பூசி 6,43,167 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,41,447 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர் மற்றும் 60-வயதுக்குமேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் அமர்நாத், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, வட்டாட்சியர் குமரையா, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 10:10 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  2. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  5. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  6. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  9. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  10. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!