Begin typing your search above and press return to search.
காவல் உதவி செயலி பதிவிறக்கம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு
காவல் உதவி செயலி பதிவிறக்கம் குறித்து அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, அரியலூர் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இன்று 22.7.22 ம் தேதி அரியலூர் போக்குவரத்து காவல்துறை சார்பாக "'காவல் உதவி செயலி'" பதிவிறக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்து அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 450 கல்லூரி மாணவியர்களுக்கு 8 நிகழ்ச்சியாக பிரித்து நடத்தப்பட்டது .அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.M. கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர் .
கல்லூரி மாணவிகள் இந்த செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.