/* */

அரியலூர்: பெரியநாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

அரியலூர்: பெரியநாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
X

அரியலூர் மாவட்டம் பெரிய நாகலூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், குறவஞ்சி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் உடையார்பாளையம், வாணதிரையன்பட்டினம், பெரியநாகலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஊர் மக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்.

Updated On: 5 July 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!