Begin typing your search above and press return to search.
அரியலூரில் அண்ணல் மகாத்மா காந்தி உருவச் சிலை திறப்பு விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணல் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்திஜியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணல் மகாத்மா காந்திஜியின் உருவச் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் இராஜேந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா நன்றியுரையாற்றினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.