அரியலூர் அருகே நாட்டுவெடிகள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
Today Fire Accident News -அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் இடத்தில் உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
HIGHLIGHTS
Today Fire Accident News - அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிப்பு கடை வெற்றியூர் கிராமத்தின் அருகே திடீர்குப்பம் வயல்பகுதியில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த நாட்டுவெடி தயாரிப்பு கடை செயல்பட்டு வருகிறது.
உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த வெடி தயாரிப்பு கடையில், தினந்தோறும் 8-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பூவரசன்(35) என்பவர், சிதறி கிடந்த மருந்துகளை கூட்டி அள்ளியபோது, உராய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த உராய்வின் காரணமாக தீப்பொறி ஏற்பட்டு மருந்துகள், அங்கு இருந்த சிறிய வகை வெடிகள் பற்றி எரிய ஆரம்பித்தன. இதில் சிறியவகை வெடிகள் வெடித்தன. விபத்தில் சேதமடைந்த மருந்துகள் மற்றும் வெடிகளின் மதிப்பு சுமார் ரூ.20,000 இருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த கீழப்பழூர் போலீசார், அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும், வருவாய்த்துறை மற்றும் போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2