/* */

காவல்நிலையங்களில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

காவல்நிலையங்களில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
X

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ( கோப்புபடம்)

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2021 ஐ முன்னிட்டு உரிமம் பெற்ற 156 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் செயல்முறை முடியும் வரை துப்பாக்கிகளை அவரது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை ஆகும். இதனையடுத்து அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரத்னா, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அரியலூர் மாவட்ட எஸ்பி, பாஸ்கரன் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதனால் துப்பாக்கி உரிமம் பெற்ற 156 நபர்கள் தங்களது துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் தனிநபர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை மொத்தம் 195. இதில் 156 நபர்கள் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 39 ( விதி விலக்குப் பட்டியலில் உள்ளவை) வங்கிப்பணிகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவவீரர்களுக்கு துப்பாக்கிகள் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனிநபர் துப்பாக்கி பயன்பாடு 100 சதவீதம் ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 9 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...