/* */

பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அருகிலுள்ள முந்திரி காட்டில் தனது ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம். சம்பவத்தன்றும் அப்படி மேய்த்து காெண்டிருந்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார்பைக்கில் வந்து, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் எடுப்பதற்கு முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 2 பவுன் மதிப்புள்ள தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.

இதில் அந்தப் பெண்ணுக்கும் வாலிபருக்கும் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் அருகில் இருந்த அரிவாளால் தாலி செயினை அறுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் விஜயகுமாரியின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.

Updated On: 10 March 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்