/* */

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 24 தீர்த்தங்கள்

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

HIGHLIGHTS

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 24 தீர்த்தங்கள்
X

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 24 தீர்த்தங்களின் மகிமை உங்களுக்கு தெரியுமா?

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடுவதற்கும் ஒரு மகிமை இருக்கிறது. இவற்றில் நாழிக்கிணறு (ஸ்கந்த புட்கரணி), வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.

நாழிக்கிணறு 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப் பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராடவேண்டும் என்பது ஐதீகம்.

வதனாரம்ப தீர்த்தம்: கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்கு நீராடுவது பாதுகாப்பற்றது. கலிங்க தேசத்து மன்னன் மகள் கனகசுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப்பெற்று நல்ல முகத்தை பெற்றாள் என்று கூறப்படுகிறது.

முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர்கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிறபகைகளை விலக்கி முக்தி வழியை நாடச்செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை,காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப்அருளும்.

சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்களையும் அறியத் தகுந்த அறிவைக்கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

பைரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்க்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மை கிட்டும்.

ஞானதீர்த்தம்: இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குருநிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல்,பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்களகரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி,ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்க வல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகரசடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும்மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கிபரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம்மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும்சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்...

Updated On: 10 July 2021 1:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?