/* */

Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம்; 9 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம்

Sabarimala- கேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்ப சுவாமியை தரிசிக்க பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 9 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

HIGHLIGHTS

Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம்; 9 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம்
X

Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம் (கோப்பு படம்)

Sabarimala, Devotees Crowd, 9 Hours Waiting, Swami Darshanam- சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 16 -ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி முன்பதிவு செய்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர் கூட்டம் வரை நீண்ட வரிசையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது. மேலும் அய்யப்பா சேவா சங்கத்தினரும் உதவி செய்து வருகிறார்கள். ஆன்லைன் தரிசனத்திற்கு இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாததால், நேரடியாக நிலக்கல் வந்து உடனடி தரிசன முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதாவது சராசரி 10 ஆயிரம் பக்தர்கள் தினசரி இந்த வகையில் முன்பதிவு செய்து சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வரை சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது 17 மணி நேரம் நேரம் சபரிமலையில் நடை திறந்து வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், நடை திறப்பு நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதாவது தினசரி மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை மாற்றி 3 மணிக்கு திறந்தால் கூடுதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி ஏந்தி பெருவழிப்பாதை வழியாக யாத்திரையாகவோ, அல்லது பம்பையில் இருந்து வழிப்பயணமாகவோ சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இன்னும் வரும் நாட்களில் இன்னும் பன்மடங்கு பக்தர் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Updated On: 6 Dec 2023 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது