/* */

சோபகிருது வருட 12 ராசிகளுக்கான பலன்கள்

சோபகிருது வருடத்தில் மனிதர்கள் வேண்டிய அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வார்கள். மனதில் இருக்கக்கூடிய கோப உணர்வுகள் குறைந்து நல்ல குணம் அதிகரிக்கும்

HIGHLIGHTS

சோபகிருது வருட 12 ராசிகளுக்கான பலன்கள்
X

சோபகிருது வருடம் 

12 ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி ஆகக்கூடிய காலங்களை தமிழில் ஒவ்வொரு தமிழ் மாதமாகக் குறிப்பிடுகிறோம். சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியான மேஷத்தில் சூரியன் நுழையக்கூடிய காலத்தை சித்திரை மாதம் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டான சித்திரை 1 பிறக்க இருக்கிறது. இது சோபகிருது தமிழ் புத்தாண்டு ஆகும். ஆக இந்த சித்திரை புத்தாண்டு 2023-ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்

சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

மேஷம் முதல் கன்னி வரை ஆண்டு பலனுக்கு இங்கே கிளிக் செய்யவும்



விவேகமாக எதையும் செயல்படுத்த முயற்சிக்கும் துலாம் ராசிஅன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை அர்தாஷ்டம சனியாக இருந்த சனி பகவான் இனி பஞ்சமஸ்தானத்தில் அமர்வதும் தனஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வளமான வாழ்வுக்கு வழி கிடைக்கும். எதிலும் எதிர்ப்பு நிலைமாறி குடும்பத்தில் இதுவரை தேவையற்ற சச்சரவுகள், விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டு வீம்பு செய்து வந்த நிலைமாறி இனி விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வருவீர்கள்.

உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் யோகாதிபதி சனி என்பதால் உங்களுக்கு அவர் பார்க்கும் இடம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். துணிச்சல், தைரியம் நிறைய இருக்கும். உங்களின் பணியை சரியாக செய்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். திட்டமிட்ட காரியம் சீக்கிரம் நடக்கும். இதுவரை உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவரை தெரிந்து கொண்டு சுதாரித்துக் கொள்வீர்கள்.

உங்களின் ராசியை 22.04.2023 முதல் குரு பார்வை பெறுவது இன்றும் சிறப்பான பலனை பெற்றுத் தரும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, வளமான சூழ்நிலை உருவாக்கிக் கொள்வீர்கள். கலைதுறையினருக்கு இதுவரை பல சொல்ல முடியாத இன்னல்கள் இருந்திருக்கும், அவற்றிலிருந்து விடுபட்டு, திறமுடன் செயல்படுவீர்கள். திருமண காரியம் தடைபட்டவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.

சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். ராகு பகவான் அக்டோபர் மாதம் ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

குறுகிய முதலீடுகள் மூலம் பெரிய லாபம் பெறும் வாய்ப்புகள் அமையும். பல நாள் ஆன்மீக பணி மீது விருப்பம் இருந்தது நிறைவேறும். தடைகள் நீங்கி மீண்டும் செயல்பட துவங்குவீர்கள். நல்ல காரியம் வீட்டில் நடக்கும். பெண் பிள்ளைகள் மனமுதிர்ச்சி அடைவார்கள். தொழிலில் முன்பைவிட சிறப்பாக நல்ல வருமானம் கைகூடி வரும். பொது வாழ்வில் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவீர்கள். மீனாட்சி அம்மனின் அனுகிரகம் உண்டு. வெங்கடாஜலபதிக்கு வீட்டிலேயே நெய் விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.


தடைகளை உடைத்து திறம்பட செயல்படும் விருச்சிக ராசிகாரர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை குரு பார்வை பெற்று வந்தது இனிவரும் 22.04.2023 முதல் குரு தொழில் ஸ்தானத்தையும். தன ஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழிலில் மேன்மை அடைந்து வருமானத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பெரிய கடனை அடைத்து சிறிய லாபம் காண்பீர்கள். உங்களின் விரயஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுக் குறையும்.

தொழில் ஸ்தானாதிபதி சூரியன் கோச்சாரப்படி செல்லும் இடத்தை பொறுத்து உங்களின் தொழிலில் நன்மையை பெறுவீர்கள். உங்களின் யோகாதிபதி சந்திரன் இருக்குமிடத்தை வைத்து பணபுழக்கம் இருக்கும். இந்த ஆண்டு கிரக பெயர்ச்சிகள் உங்களின் ராசிக்கு நல்லதல்ல என்றாலும், உங்களின் ராசிநாதனின் பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் உறவு பழக்கங்களில் கட்டுபாடு இருப்பது அவசியம். வீடு சம்மந்தமான சில சிக்கல்கள் வரும் என்பதால், ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதும் சரி செய்து கொள்வதும் நல்லது. வெளிநாடு பயணம் செய்ய விசா எளிதாக கிடைக்கும்.

மிகவும் பொறுமையும், கவனமும் இருந்தால் வரும் துன்பத்தை எளிமையாக்கி கொள்ளலாம். சுற்றத்தாரிடம் அதிகம் பேசுவதைத் தவிர்த்து விட்டு, தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொண்டால் எல்லாம் சரியாக நடக்கும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சரிவுகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கண் கொத்தி பார்ப்பாக சுற்றி இருக்கும் விஷயங்களை கவனிக்க வேண்டும்.

எதையும் முன்கூட்டி யோசித்து செயல்பட்டால் எல்லாம் இன்பமாக மாற்றிக் கொள்ள முடியும். தேவையற்ற சில காரியங்களை தவிர்த்து விடுவது நல்லது. மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.


தன்னம்பிக்கையும், உறுதியும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சனி யோகச்சனியாகவும், குரு பார்வையும் பெறுவது நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை ஏழரை சனி தாக்கத்தால் பல்வேறு துன்பங்களை அடைந்த உங்களின் நிலை இனி யோக சனியால் மனவலிமை பெற்று எதையும் துணிச்சலுடன் செயல்படும் தைரியம் உண்டாகும். குடும்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மனகசப்பு தேவையற்ற சச்சரவுகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறும் வாய்பைப் பெறுவீர்கள்.

மனதில் எதை முடிவு செய்தாலும் அதை செய்து முடித்து விடுவீர்கள். காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை மாற்றி அமைத்து கொள்வீர்கள். உங்களின் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள். எதையும் நேர்மையாக செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். சனி பகவான் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு தனி திறமையுடன் செயல்படும் முக்கியத்துவம் இருக்கும்.

குரு உங்களின் ராசிநாதன் என்பதால் குரு ராசியை பார்ப்பதும் நற்பலன்கள் அமையும். உங்களின் ராசிக்கு பாக்யஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்களின் தொழில் சிறப்பாக அமையும். கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களுக்கு விடியலை பெற்று தரும். எதிலும் வெற்றியை பெறுவீர்கள்.

கலைதுறையில் நல்ல முன்னேற்றமும், புதிய ஒப்பந்தங்களும் உண்டாகும். நிலையான தொழில் வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். அரசியலில் சிறந்த ஆலோசராகவும், கருத்துகளை தெளிவாக உணர்த்துவதில் வல்லவராகவும் திகழ்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான அனைத்து அம்சங்களும் உங்களுக்கு நிறைந்து இருக்கிறது.


திறமையும், பொறுமையும் கொண்ட மகர ராசிகாரர்களே

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாத சனியாகி விடுவதும் குரு நான்காமிடத்திற்கு பெயர்ச்சியாவதும் ஆண்டு இறுதியில் ராகு / கேது பெயர்ச்சி யோக ராகுவாகிவிடுவதும் உங்களின் கடந்த கால பல சிரமங்கள் விலகி நன்மையுண்டாகும். வெளியூர் பணியில் சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். எதிலும் உங்களின் திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள்.

இதுவரை வெளிபடுத்தாமல் இருந்த அனைத்து திறமைகளையும் வென்று சிரமத்திலிருந்து மீண்டு வருவீர்கள். செய்து வரும் தொழிலில் இருந்த தொய்வு நிலை மேன்மை அடைந்து வளர்ச்சியை பெறும். விளையாட்டு துறையில் முக்கியமான இடத்தை பெறுவீர்கள். கலை துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தலைமையில் இருப்பவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குடும்பத்திலும் இருந்து வந்த சச்சரவு நீங்கி நன்மையையும், பொருளாதாரத்தில் வளமும் பெற்று வருவீர்கள்.

புதிய தொழில் வாய்ப்புக்கு சில காலம் தள்ளி போடுவது நல்லது. உங்களின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும். எதையும் எளிதில் புரிந்து கொள்தல், எதற்கு பயமின்றி செயல்படுதல் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட்டு செயல்பட்டு கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். அதற்கான நேரமாக இது அமையும் என்று நம்பிச் செயல்படுவீர்கள். உங்களின் லட்சிய பயணம் சிறக்க உதவிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரின் மூலம் உங்களின் வாழ்வு நல்ல வளம் பெறும். தேவைகளுக்கு வருமானம் கிடைக்கும்.

வேலை அதிகமாக இருக்கப் போகின்றது. அடுத்தடுத்து வேலைகள் வந்து உங்களை பிசியாகவே வைத்துக் கொள்ளும். அயராது உழைத்தால் இந்த வருட பிறப்பு உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கும்.


வருவதை வைத்து வளமாக வாழ வேண்டும் என நினைக்கும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசியில் ராசிநாதன் சனி பகவானும். தனஸ்தானாதிபதி மூன்றாமிடத்திலும். தனஸ்தானத்தில் ஆண்டு இறுதியில் ராகுவும் பெயர்ச்சியடைவது உங்களின் அன்றாட பணிகளில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். எதை செய்தாலும் நிதானமும், செயலில் விவேகமும் இருக்கும்படி செயல்படுவது நல்லது.

இதுவரை விரய சனியாக இருந்த பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து வந்த சனிபகவான், இனி தொழிலிலும். பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகச் செய்வார். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு உயர்பதவிகளும். தனி அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத விதமாக அமையும். சொந்த இடத்தில் பணம் வந்து சேரும். யாரையும் நம்பி எந்த தொழிலும் செய்யாமல் முழுமையாய் உங்களின் மீது நம்பிக்கை வைத்து எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றியை பெறுவீர்கள்.

முக்கியமான சில ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலை அமையும். ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமுடன் இருந்தால் சிறப்பாக அமையும். சிறு வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

வெளிநாட்டில் இருந்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன்பட்ட சிலருக்கு சிறு கடன் தீரும். வீடு கட்டுவதற்கு முயற்சிகளில் நல்ல வளர்ச்சி இருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகளும், பாராட்டுதல்களும் அமையும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற்று தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு திருமண காரியமும் சீக்கிரம் நடக்கும். புதிய தொழில் வாய்ப்பு பெண்களுக்கு அமையும்.


ஆர்வத்துடன் அனைத்தையும் செய்யும் மீன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு விரய சனியாகவும், ஜென்ம குரு தன குருவாகவும் விடுவதும். இந்த ஆண்டு மத்தியில் ராகு / கேது ஜென்ம ராகு களத்திர கேதுவும் அமைவதும். உங்களின் வாழ்க்கைக்கு நல்ல படிப்பினையாக அமையும். எதையும் யோசித்து நிதானமாக செல்வது, தொழிலில் சிறப்பாக அமைத்து கொள்வது, உங்களின் மீதுள்ள நம்பிக்கை எப்பொழுது வைத்து செயல்படுவது போன்றவை உங்களின் வாழ்க்கை வளம் பெற உதவும். பிறரிடம் எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் எதையும் யோசித்து சொல்வதும், செயல்படுவதும் நல்லது. பணியிலிருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் சற்று நிதானமான போக்கை கடைபிடிப்பதும் அனுசரித்து செல்வதும் நல்லது. கலை துறையினர் தங்களின் கட்டுபாட்டில் இருக்கும்.

அனைத்து வித காரியங்களை கவனித்து செய்வதுடன் பிறரின் பொறுப்பில் வரும் போது அதனை கண்காணித்து செயல்படுவது நல்லது. விரயாதிபதியே விரய ஸ்தானத்தில் அமர்வதால் சுப விரயமாக அதை அமைத்து வீடு கட்டுதல், நிலம் வாங்கிப் போடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது மிக சிறந்தது.

வெளிநாடு செல்ல நல்ல நேரமாக அமையும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் இன்னும் நல்ல பலன் தேடி வரும். ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு நல்ல ஆசான் அமைய பெறுவார். நினைத்தபடி சிலருக்கு மகானின் ஆசி கிடைக்கும். புதிய அனுபவமும், அறிவியல் விடயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அரசியலில் ஒதுங்கி சில காலம் இருப்பது நல்லது. மேலும் வாழ்வில் தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் தவிர்க்கவும்.

சில நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த மாற்றங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய மாற்றங்கள் தான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்‌. ஆரோக்கியம் மேம்படும்.

Updated On: 13 April 2023 10:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு